கனா கண்டேன் விதையிட்ட போது,
மாமன் வரும் கணம் கனிவாயென்று;
மண்டியிட்டேன் முதல் குருது தலை காட்டிய போது,
உறுதியாய் நின்று நலமோடு கனிய;
மண்றாடினேன் உருவம் தென்பட்ட போது,
வீட்டுக் கண்வித்தைப் பெருச்சாலிகளிடமிருந்து தப்பிக்க;
தப்பித்தும் வெப்பப் புழுக்கத்தின் காந்தலில் வாடிய போது,
பயத்துடன் பறித்தேன் காயாய் கசப்பாயென்று மாமன் விடைபெற்றவுடன்;
நடுக்கத்துடன் குருவால் கொண்டு வெட்டிய போது,
பூரிப்படையச் செய்தாய் செங்கனி திரண்டு;
வெட்டு்ற்று கசக்கிய போது,
இனிப்பாய் தித்தித்தாய் நாவிற்கு விருந்தாய்;
மாமன் மறுபுற வீட்டை அடைந்த போது,
செல்பேசியில் இவ்வனைத்து நிஜமும் வண்ணப் புகைப்படமாய்
என் தோட்டக் கோசா!
மாமன் வரும் கணம் கனிவாயென்று;
மண்டியிட்டேன் முதல் குருது தலை காட்டிய போது,
உறுதியாய் நின்று நலமோடு கனிய;
மண்றாடினேன் உருவம் தென்பட்ட போது,
வீட்டுக் கண்வித்தைப் பெருச்சாலிகளிடமிருந்து தப்பிக்க;
தப்பித்தும் வெப்பப் புழுக்கத்தின் காந்தலில் வாடிய போது,
பயத்துடன் பறித்தேன் காயாய் கசப்பாயென்று மாமன் விடைபெற்றவுடன்;
நடுக்கத்துடன் குருவால் கொண்டு வெட்டிய போது,
பூரிப்படையச் செய்தாய் செங்கனி திரண்டு;
வெட்டு்ற்று கசக்கிய போது,
இனிப்பாய் தித்தித்தாய் நாவிற்கு விருந்தாய்;
மாமன் மறுபுற வீட்டை அடைந்த போது,
செல்பேசியில் இவ்வனைத்து நிஜமும் வண்ணப் புகைப்படமாய்
என் தோட்டக் கோசா!