Pages

கொசு வலை

மாட்டேன் என்று ஒருபோதும் சொல்லாமல்

கூண்டுக்குள் அகப்படுவேன்

- கொசு வலை

அலை

தொடாமல் போகமாட்டேன், காத்திரு என்றது

கைகூப்பிக் கால் நனைத்தவாறு வருடியது

அன்னை கூப்பிட்டதால் பின்வாங்கினாள்

- கடல் அலை




என் தோட்டக் கோசா

கனா கண்டேன் விதையிட்ட போது,

மாமன் வரும் கணம் கனிவாயென்று;

மண்டியிட்டேன் முதல் குருது தலை காட்டிய போது,

உறுதியாய் நின்று நலமோடு கனிய;

மண்றாடினேன் உருவம் தென்பட்ட போது,

வீட்டுக் கண்வித்தைப் பெருச்சாலிகளிடமிருந்து தப்பிக்க;

தப்பித்தும் வெப்பப் புழுக்கத்தின் காந்தலில் வாடிய போது,

பயத்துடன் பறித்தேன் காயாய் கசப்பாயென்று மாமன் விடைபெற்றவுடன்;

நடுக்கத்துடன் குருவால் கொண்டு வெட்டிய போது,

பூரிப்படையச் செய்தாய் செங்கனி திரண்டு;

வெட்டு்ற்று கசக்கிய போது,

இனிப்பாய் தித்தித்தாய் நாவிற்கு விருந்தாய்;

மாமன் மறுபுற வீட்டை அடைந்த போது,

செல்பேசியில் இவ்வனைத்து நிஜமும் வண்ணப் புகைப்படமாய்

என் தோட்டக் கோசா!












சாய்நாற்காலி

ஓய்விற்கு ஒய்யாரம்

வீட்டிற்கு ஒன்று

விரும்புபவர் கணக்கில்லை

தான் ஓய்வெடுக்கும் என்றும்

விடுமுறை அன்றோ உனக்கா எனக்கா என்ற போராட்டம்

ஒன்றுக்கு இரண்டுண்டு இன்று

போட்டியிட ஆளில்லாமல்

தனிமையில் வாடுது

சாய்நாற்காலி!




கருணாநிதி நாற்காலி

நான் உயிர்த்தேன் உன் முதுமையின் இன்ப பயணத்தில்

கோடான கோடி உடன்பிறப்பினும் நான் உடன் இருப்பவனானேன்

குடும்பத்தில் ஓர் அங்கமாய் அனைவரும் என் அங்கம் அறிவர்

எண்ணில்லா தருணங்கள் கடந்தோம் உடனிருந்து

என்ன தான் நாம் இணைந்து இயலாமையை வென்றாலும்

காலத்தை யாரேனும் வெல்ல முடியுமோ

சாதாரன சமயங்களில் உடனிருந்தேன்

உன் இறுதிப் பயணத்தில் என்னை தனித்திட்டு

கருவிக்கும் இடைப்பட்ட இறப்புண்டு என நிரூபனமானது

அடுத்த ஜென்மத்தில் முடிந்தால் சந்திப்போம்

இப்படிக்கு காத்திருக்கும் நாற்காலி!


ஆசை முதல் வண்டி

காலமெல்லாம் என்னோடு அணுஅணுவாய் நகர்ந்து

கைகாட்டிய இடமெல்லாம் எட்டிட்டு வழிநடத்தி

இருளில் ஒளி பரப்பி, என் ஆழ்மனதச்சத்தை விலக்கி

சாலையின் மேல் தவறு செய்தால் தண்டித்து

கடிதான சூழ்நிலைகளில் இடையூறின்றி நகர்ந்து

தங்கத்தாரகையாய் மின்னிய வண்ணம் சிரிக்கும்

என் ஆசை முதல் வண்டி!


பவானி

கோடிட்டுக் காத்திருந்தவன்

கோடுகளை சரிபார்த்து

கச்சிதத்திற்கு பரிசாய்

முளைப்புக்கு நீர்வாரிச் சென்றது

மழை, மலையிறங்கிய

பவானி!


அந்தி மாலை

கதிரவனின் சுவடுகள்

மையிட்ட வானத்தில்

நிலவொளியின் சீற்றத்தால்

நீல நிற திரையின் மேல்

கருநிற ஓவியமாய் தென்னங்கீற்றுகள்

தன் பங்கிற்கு விளக்கின் பிரகாசமான ஒளி

அழகான அந்தி மாலை!


நொடிமுள்

நிற்காமல் ஓடும், இதயம் நின்றாலும்

பெரிய சிறிய தமையன்களை கூட்டிக் கொண்டு

கணக்கிட்டுக் கடப்பான் கணங்களை

அடுத்தவர் எண்ணத்தை பொருட்படுத்தாமல்

தன் பணியில் கருத்தாயிருப்பான்

நொடிமுள்!


கூடை

ஒருவிதக் கலை

வர்ணங்களை சுழற்றியவாறு

அடிகளைஅளந்து

கோடுகளை வழிநடத்தி

சிக்கல்களை தவிடுபொடியாக்கி

கற்பனையில் உதித்த ஓவியத்தை

கையில் உயிர்பித்தால்

கூடை!


கொலுசு

முத்துக்களும் மணிகளும் அணிவகுத்து நின்று

வெள்ளி தங்கக்கொடி கம்பளம் விரித்து

மண்ணுலகின் வண்ணங்களை வைர வைடூரியங்களை பூட்டி

இவ்வுலகை ஆள உந்தூர்தியாய் காப்பிட்டு

தடம்புரளாமல் இருக்க  ஒலிக்கடிவாளம் கட்டும்

மண்தொடா பாதங்களை அலங்கரித்த

கொலுசு!



மகளின் முதல் ஓவியம்

முகத்தில் பெருமித புன்னகையோடு

பிஞ்சு விரல்கள்

சுட்டிக்காட்டிய தான் வரைந்த தாமரை,

சிவப்போ பச்சை நிறமோ

ஒன்றோ இரண்டோ எண்ணிக்கையில்

வளைந்தோ மடங்கியோ உருவத்தில்

நீரில் மிதந்தோ தரையில் நின்றோ

இலையோடு இணைத்தோ விலகியோ

என்னவென்று விவரிப்பது

தன் மனதில் மலர்ந்த தாமரையை

தன் மகளின் முதல் ஓவியத்தை பார்த்து!


வேகத்தடை

சிலு சிலு காற்று

கதை பேசும் கார்குழல்

ரசித்த வண்ணம் வானத்தின் ஓவியம்

துடிக்கும் வாலிப மனது

மின்னல் வேகம்

மனதில் மகிழ்ச்சி

சடக்கென்று ஒரு சலசலப்பு

வேகத்தடை

சிறுகண மகிழ்ச்சிக்கு ஈடில்லா உயிரை பலி கொடுக்காதே
என்று நினைவூட்டியது


குடும்பம்

கதிரவன் காணில் நிழலாய் தொடர்ந்து

சந்திரன் காணில் ஒழியாய் வழிநடத்தி

பிறரினும் மேலாய் நான் விளங்க என் வழி நீ நின்று என்னை தயார்படுத்துகிறாய்

என் குடும்பம்;



நெடுஞ்சாலை

நெடு நெடுவென நீண்டு

நெகிழ்வோடு வளைந்து

இருபக்கமும் மரங்கள் காவல்காக்க

பூச்செடிகள் புன்னகைக்க

மேற்கூரையாய் வானம் மூடாக்கிட

கரடுமுரடாய் வாகனங்கள் தன்மேல் வலம்வர

அவ்வபோது துயரம் கண்டும் காணாததுமாய்

தன் இயல்பில் இருந்து மாறாது

சுரியனின் வெப்த்தையும் கானல்நீராய் பிரதிபலிக்கும்

கோடிட்ட ஆடையை அணிந்திருக்கும்

நெடுஞ்சாலை!!!


மழைத்துளி

மழைத்துளி

மென்மையாய் நிதானமாய் கைகோர்த்து

நாம் வியக்கும் வண்ணம்

நாற்சக்கர வண்டிக் கண்ணாடியில்
வழிந்தோடியது

மழைத்துளி!